நாடு முழுமையாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது: ரஞ்சித்

கொழும்பு,ஜுன் 19

நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கம் முழுமையாக தோல்வியை கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுமையாக மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள், எரிவாயு விநியோகம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலைமை தற்போது நாட்டில் ஏற்ப்பட்டுள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply