
அதிகூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்த 106 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது முதல் அதிகூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரச் சபை சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளது
அந்த சுற்றிவளைப்புக்கமைய கடந்த சில நாட்களில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது குற்றவாளிகளிடமிருந்து 3 மில்லியன் ரூபாவை அபராதமாக பெற்றுக்கொண்டதாக நுகர்வோர் விவகார அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, உணவு நெருக்கடிக்கு தீர்வாக அரசால் பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் காணி மீட்பு கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அடையாளம் காணப்பட்ட 283 ஏக்கர் நிலப்பரப்பு பயிர்ச்செய்கை நடவடிக்கைகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடிக்கு தீர்வாக குறித்த காணிகளில் பயிர்ச் செய்கை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிலியந்தலை, கெஸ்பேவ, பெப்பிலியான, நாவின்ன, போக்குந்தர மற்றும் பில்லேவ முதலான பிரதேசங்களில் இந்தக் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்





