அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது!

<!–

அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது! – Athavan News

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை கடற்பரப்பில் கடற்படை தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட போதிலும் சட்டவிரோத குடியேற்றங்களை கையாளும் பழைய கொள்கையே தற்போதும் இருப்பதாக இலங்கை அதிகாரிகளிடம் இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply