முச்சக்கர வண்டியொன்றின் மூலம் எரிபொருள் மோசடி

மாத்தளை, ஜூன் 25

முச்சக்கர வண்டியொன்றின் மூலம் எரிபொருள் மோசடியில் ஈடுபட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று (25) வைரலாகியுள்ளது.

அதிகளவில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியின் எரிபொருள் தொட்டிக்கு மேலதிகமாக கேன் ஒன்றை மறைத்து வைத்திருந்தமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை இன்று பரிசோதிக்க நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Leave a Reply