கோட்டா கோ கமவில் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கம வில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டமானது இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் கோட்டா கோ கம விளையாட்டுத் திடலில் அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் திருவிழா இன்று மாலை நடைபெற்றது.

குறித்த கிரிக்கெட் போட்டியில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து வரும் இளைஞர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply