தொடரும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள்;களனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சூட்டில் ஒருவர் பலி!

களனி, பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 31 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply