பிரசன்ன ரணதுங்க வீட்டுக்கு தீ வைப்பு: களனி பல்கலைக்கழக பேராசிரியரான தேரர் கைது

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வண. நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (27) காலை கம்பஹா காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேரரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply