எரிபொருள் நெருக்கடி: ரயில் சேவை முடங்கும் அபாயம்

கொழும்பு,ஜுன் 27

நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி தொடருமானால் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி காரணமாக ரயில் திணைக்களத்தின் திறன் நீடிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

நிதி, போக்குவரத்து மற்றும் எரிபொருள் பிரச்சினைகளால் தற்போது அதிகளவான மக்கள் ரயில்களைகளை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு குறைவான ரயில் கட்டணங்களும் பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கோரிக்கையை நிறைவேற்ற ரயில் திணைக்களம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

Leave a Reply