நாடளாவிய ரீதியில் வீட்டுதோட்ட பயிர்செய்கைக்கு ஊக்குவிப்பு

நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் வீட்டு தோட்ட பயிர்செய்கை ஊக்குவிப்பு சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், புத்தசாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இராமகிருஷ்னன் சுவாமி, சின்மய மிஷன் சுவாமி ,கலாநிதி ராமசந்திர குருக்கள் பாபு சர்மா, அமைச்சின் செயலாளர் சோமரெட்ன, மாவிட்டபுரம் ஐயா சாமி ஐயர் ,இந்து கலாச்சார தினைக்கள பணிப்பாளர் உமா மகேஷ்வரன் அவர்கள், இந்து மாமன்ற உப தலைவர் எஸ். தனபாலா, முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் உடுவை தில்லை நடராஜா மற்றும் இந்து கலாச்சார திணைக்களத்தின் உதவி நிர்வாக பிரிவு தயா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் அமைச்சரினால் கலாநிதி ராமசந்திர குருக்கள் பாபு சர்மாவிடம் கையளிக்கப்பட்டது.


பிற
 செய்திகள்

Leave a Reply