
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை இன்றைய தினம் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் தேவைப்படுவோர் உதவிக்கு சுற்றுலா அவசர தொலைபேசி எண் 1912 அல்லது 0112 437759 தொடர்பு கொள்ளலாம் என்றார்.
பிற செய்திகள்





