மகாசங்கத்தின் அறிவுரைகளை பின்பற்றாததே தற்போதைய நெருக்கடிக்கு காரணம்! அஸ்கிரிய மகாநாயக்கர்

அதிகாரிகள் மகா சங்கத்தினரின் ஆலோசனையைப் பெறாததன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், இலங்கையின் மதகுருமார்கள் தமக்கு வழங்கிய ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை.

மக்கள் மீதான பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை குழந்தைகளும் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

பொருளாதார முறைகேடுகள் மற்றும் மதத் தலைவர்கள் வழங்கும் அறிவுரைகளை அறியாமை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்



Leave a Reply