திடீரென மேலெழுந்த கடல் அலைகளால் போக்குவரத்தும் பாதிப்பு!

கடல் அலைகளின் வருகையால் உஸ்முதுனாவ சந்தியிலிருந்து ஹிக்கடுவ குமாரகந்த சந்தி வரையான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அலகந்த வீதியிலும் அபாயம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply