லங்கா IOC மூலம் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் இன்று விநியோகம்

திருமலை, ஜுலை 11

இன்று காலை திருகோணமலை முனையம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் சுமார் 100க்கும் அதிகமான பௌசர்களில் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து விநியோகஸ்தர்களும் நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர் இதன் போது கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply