கோட்டாவை முக்கியமான இடத்தில் பாதுகாக்க தயாராகும் சக்திகள்! – அரசியல் ஆய்வாளர் தகவல்

யுத்த வெற்றி ஊடாக வெற்றி வீரனாக கொண்டாடப்பட்ட, மகாவம்சத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட போர் வீரரான கோட்டாபய ராஜபக்சவை அந்நிய நாட்டில் கைது செய்து சிறையில் அடைக்க மகாசங்கத்தினர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்சவை முக்கியமான இடத்தில் வைத்து பாதுகாக்க மகா சங்கத்தினர் போன்ற பல சக்திகள் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் கொள்கையை பின்பற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் முகங்கள் மாறியுள்ளதே தவிர முகவரிகள் மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு துரத்தப்படுவதற்கு முன்னர் மகாசங்கத்தினரின் செயற்பாடுகள் முக்கியமாக காணப்படுகின்றது.

அதாவது பௌத்த சிங்கள மகா சங்கத்தினரின் ஆணையை ஒருபோதும் மீறமாட்டேன் என கோட்டாபய போன்று ரணில் விக்ரமசிங்கவும் மதிப்பதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *