பாரத பிரதமரை இலங்கைக்கு வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு!

அடுத்த வருடம் (2023) இந்திய வம்சாவழி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றது. இதனை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து  நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்நிகழ்வுக்கு இந்தியப் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமியபவனில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *