கொள்ளுப்பிட்டி விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 26 வயதான சாரதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி நிலையில் நேற்று (திங்கட்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது  முச்சக்கர வண்டியில் சொகுசு காரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.

கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று அன்றைய தினம் துபாய்க்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன், காரில் பயணித்த இருவரில் பெண் ஒருவர் விபத்தை நேரில் கண்டவர்களால்  தாக்கப்பட்டுள்ளார்.

கார் சாரதிக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *