30 பவுண் நகைகள் திருட்டு!

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளன.

சுழிபுரம் வடக்கில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் முப்பதரைப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் , தனது உறவினர் ஒருவரின் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply