இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமனம்!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்த்தர் கடந்த டிசம்பர் மாதத்துடன் பதவி விலகியிருந்தார்.

இதனையடுத்து, சிம்பாப்வே அணிக்கெதிரான டரின் போது இலங்கை அணிக்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையில், தற்போது அவர் அவுஸ்ரேலியாவுடனான தொடருக்கும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply