வேகமாகப் பரவி வரும் டெங்கு! – 6,896 பேர் பாதிப்பு

இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நேற்று வரையான 26 நாட்களில் 6 ஆயிரத்து 896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.

மக்கள் தமது சுற்றுச்சூழலை டெங்கு நோய் பரவாத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

யானையிடம் போராடி தன் மகளின் உயரை காப்பாற்றிய தாய்!

Leave a Reply