கிண்ணியா உப்பாற்றில் கடலரிப்பு

திருகோணமலை – கிண்ணியா உப்பாறு பாலத்திற்கு அருகில் கிண்ணியா நோக்கி அமைந்துள்ள கடற்கரை மிக வேகமாக அரிப்புக்குள்ளாவதால், திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி மிக வேகமாக பாதிப்படையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பினால் கடலுக்கும் பிரதான பாதைக்கும் இடையே ஒரு சில மீற்றர் இடைவெளியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கடலரிப்பைத் தடுப்பதற்காக பாரிய கருங்கள் இடப்பட்டு தற்போது தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில் கடலரிப்பினால் பல மீற்றர்கள் கடலுக்குள் இழக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வீதி ஒன்றும் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய நிலப்பகுதியை கிண்ணியா பிரதேச மக்கள் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply