யாழில் நண்பர்களுடன் தேனீர் அருந்திக்கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், யாழ்.மிருசுவில் – உசன் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, தேனீர் குடித்துக் கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி ஒருவர் திடீரென மூர்ச்சையடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது,
மாத்தளையை சேர்ந்த 51 வயதான ஜெயசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.