காலியிலும் துறைமுக நகரம்: ரோஹித அபேகுணவர்தன

கொழும்பு, ஜனவரி 27:

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகரான சுற்றுலா வலயம் ஒன்று காலி துறைமுகத்தை சுற்றி அமைக்கப்படும் என்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:

காலி துறை முகத்தை சுற்றிய பகுதியில், 40 ஹெக்டேரில் மணல் நிரப்பி இந்த சுற்றுலா வலயத்தை அமைக்க அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகவே இது மேற்கோள்ளப்படவுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தைப் போன்று இங்கேயும், தனியார் முதலீட்டாளர்கள் ஊடாக சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், வீடுகள் என்பன நிறுவப்படும்.

இத்திட்டத்தின் மூலம் காலியை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்

Leave a Reply