
கொழும்பு, ஜனவரி 27:
பாணந்துறையில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்
அம்புலன்ஸ் வாகனம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் அம்புலன்ஸ் வண்டியின் சாரதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டனர். ஆனால், அந்த நேரத்தில் துப்பாக்கி செயலிழந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.