திருகோணமலையில் சிறந்த விவசாயிகள் விருதுகள் வழங்கி கௌரவிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 2021 ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளை தெரிவு செய்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று(27) திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர்
எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது சிறந்த விவசாயிகளுக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2021ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து துறைகளில் விவசாயத்தில் சாதனை படைத்தவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த விதை உற்பத்தியாளர், சிறந்த நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பயிர் செய்யும் சிறந்த விவசாயி, சிறந்த வர்த்தக ரீதியிலான கூட்டெரு உற்பத்தியாளர், சிறந்த வர்த்தக ரீதியிலான பழ உற்பத்தியாளர், சிறந்த சேதன விவசாயி என்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்டு இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு துறையிலும் தலா மூன்று பேர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply