வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது!

கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு இன்று (27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவு சீட்டு வீநிநோயகம், கடவுச் சீட்டு விண்ணப்பம் பெறுதல் என அனைத்து செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டு பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர்களுடன் தொடர்பில் இருந்த உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாவின் ஆட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உடையும் – சஜித் அணி காத்திருப்பு

Leave a Reply