சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் பொங்கல் விழா!

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின், தமிழ் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது.

நிகழ்வுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில், காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன்போது, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், பலூன் ஊதி உடைத்தல், தேசிக்காய் கரண்டி, சாக்கோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மாணவர்களால் பொங்கலும் பொங்கி படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply