இலங்கையில் நாளாந்தம் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பு!

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் இஷானி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் புற்றுநோயால் 31,848 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, உலக புற்றுநோய் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply