கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து ஆராய்வு

<!–

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து ஆராய்வு – Athavan News

கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

கொரோனா நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இதன் நோக்கமாகும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அனைத்துக் கட்சி செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply