சிவப்பு சீனி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்

சிவப்பு சீனி தட்டுப்பாடு மற்றும் மஞ்சள் உற்பத்திகளை சர்வதேச அரங்கிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் தற்போது சிவப்பு சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கரும்பு பயிர்செய்கை முடிந்து 24 மணி நேரமும் சர்க்கரை உற்பத்தி செய்து வரும் கரும்பு ஆலைகளின் இயந்திரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை பழுது நீக்கப்படுவதே இதற்கு காரணம்.

அதே போல உள்நாட்டில் பயிரிடப்படும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும், மஞ்சள் பயிரிடும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply