தென்கொரியாவிற்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன!

<!–

தென்கொரியாவிற்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன! – Athavan News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான SQ-468 இல் சிங்கப்பூர் வழியாக தென் கொரியா நோக்கி அவர் பயணித்துள்ளார்.

தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக சமாதான உச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே அவர் அங்கு சென்றுள்ளார்.

அவருடன் குறித்த விஜயத்தில் மேலும் இருவர் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply