முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் மன்­னா­ரில் போராட்­டம்

முன்­பள்ளி ஆசி­ரி­யர்கள் தமக்கான சம்­பள அதி­க­ரிப்பு மற்­றும் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கக் கோரி, மன்­னார் மாவட்­டச் செய­ல­கத்­தின் முன்­பாக நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மன்­னார் மாவட்­டத்­தில் 400க்கும் மேற்­பட்ட முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் துறை சார்ந்த தகை­மை­களை நிறைவு செய்­துள்­ள­னர். மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக சம்­பள உயர்வு மற்­றும் நிரந்­தர நிய­ம­னத்­தைக் கோரி, ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யுள்­ள­னர். எனி­னும் இது­வரை தீர்வு கிடைக்­க­வில்லை.

இந்த நிலை­யில் தற்­போ­தைய வாழ்க்­கைச் செலவை எதிர்­கொள்ள வழங்­கப்­ப­டும் கொடுப்­ப­னவு போதாது. எனவே நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­வ­தோடு, சம்­பள உயர்­வும் வழங்­கப்­பட வேண்­டும் என்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

ஆர்ப்­பாட்­டத்­தின் இறு­தி­யில் ஜனா­தி­ப­திக்­கான மனு, மாவட்­டச் செய­லர் திரு­மதி அ.ஸ்ரான்லி டிமெ­லி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள் கலந்துகொண்­ட­னர்.

Leave a Reply