
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் முகக்கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மக்கள் செலவிட்டுள்ளனர்.
இந்தத் தகவலை நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஷ்ட அதி காரியொருவர் வெளியிட்டுள்ளார்.
கொரோனாப் பெருந்தொற்று நிலைமை காரணமாக, மக்கள் அதிக பணத்தை முகக்கவசத்துக் காக செலவிட்டுள்ளனர். அதற்கமைவாக நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாவை செலவிடுகின்ற னர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள போதும், தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் நாளாந்தம் முகக்கவசம் அணிய நேரிட்டுள்ளது. எனவே முகக்கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதன் மூலம், மக்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





