இந்துத்துவா அமைப்புக்கு எதிராக முஸ்லிம்கள் போர்!

கர்­நா­டக மாநி­லம் உடுப்பி அரசு கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் மாண­வி­கள் ஹிஜாப், பர்தா, புர்கா ஆகி­யவை அணிந்து வர இந்­துத்­துவா அமைப்­பி­ன­ரால் தடை செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அதற்­கெ­தி­ராக முஸ்­லிம் மாண­வர்­கள் போராட்­டத்­தில் இறங்­கி­யுள்­ள­தால் அங்கு பதற்­ற­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஹிஜாப் அணிய விதிக்­கப்­பட்ட தடைக்கு எதி­ரா­க­வும், இந்­துத்­துவா அமைப் பின் சித்­தாந்­தங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் 6 முஸ்­லிம் மாண­வி­கள் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­துத்­துவா அமைப்­பி­னர் காவி நிறத் துண்டு அணிந்து ‘ஜெய் சிறி­ராம்’ என கோஷம் எழுப்­பி­வ­ரும் நிலை­யில், மாண­வி­கள் அவர்­க­ளுக்கு எதி­ராக ‘அல்­லாஹூ அக்­பர்’ என்ற கோசத்தை எழுப்பி வரு­கின்­ற­னர்.

கர்­நா­ட­கா­வின் பாகல்­கோட்டை, ஹாசன், மண்­டியா, கோலார ஆகிய மாவட்­டங்­க­ளி­லும் போராட் டம் தீவி­ர­மா­கப் பர­வி­யுள்­ளது. அங்கு கல­வ­ரங்­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் உள்­ளன என்று சுட்­டிக்­காட்­டப் ப­டு­கின்­றது.

இதை­ய­டுத்து அடுத்த 3 நாள்­க­ளுக்கு கர்­நா­டகா மாநி­லத்­தில் உள்ள அனைத்து பள்­ளி­க­ளுக்­கும் கல்­லூ­ரி­க­ளுக்­கும் விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பதற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இந்த அறி­விப்பு பாது­காப்­புத் தரப்­பால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தீவிர இந்­துத்­துவா சித்­தாந்தத்­து­டன் தொடர்­பு­டைய ஆளும் கட்­சி­யான பார­திய ஜன­தா­வின் முக்­கி­யஸ்­தர்­கள் ஜெய்­சி­றி­ராம் என்ற கோஷத்­து­டன் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­துள்­ள­னர். எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­ஸூம் ஏனைய சிறு­பான்மை மதக் கட்­சி

­க­ளும் காவிக் கொடி­க­ளு­டன் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வோ­ரைக் கண்­டித்­த­து­டன் முஸ்­லிம் மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வாகக் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.

Leave a Reply