
திரிபோலி, பெப் 11: லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.
இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.





