பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து! துண்டான நபரின் பாதம்

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலியவெவ பகுதியில் 19வது மைல் கல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பாதம் உடலில் இருந்து தனியாக கழன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான காரின் சாரதி தலைமன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான வைத்தியர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்கொடை உண்டியலை உடைத்து பணம் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர்

Leave a Reply