
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் போது போர் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் இராணுவ அணிவகுப்பில் விடுதலைப் புலிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த புகைப்படம் யாருடையது, எப்படியானது என தெரியாமல் இராணுவத்தினரின் அணிவகுப்பு வாகனத்தில் அதனை இணைத்துள்ளதாகவும், புகைப்படங்களை தெரிவு செய்த பொறுப்பாளர்கள் தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





