வைத்தியசாலை – மின்சாரம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

வைத்தியசாலை சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலைகள், சிகிச்சையகங்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு, சிகிச்சை ஆகியவை தொடர்பில் ஆற்றப்படவேண்டிய அனைத்து அவசியமான அல்லது தேவைப்படும் தேவைகள் மற்றும் பணிகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply