
நானும் சிறைக்கு சென்றேன், கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்தேன். என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதற்காக ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.
அரசதலைவரின் கொள்கை அறிக்கையில் இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுதான் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது. சிறைச்சாலையில் காணப்படும் இடநெருக்கடியை தீர்வு காண்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பலர் எந்த வழக்குகளும் இன்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அப்படியே வைத்திருக்க முடியாது. இது அநீதி.
நானும் சிறைக்கு சென்றேன். இந்த கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்தேன்.
கிராமத்தில் கையை வெட்டியவர் சிறையில். கடந்த ஆட்சிக்காலத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் அரச தலைவரின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
கையை வெட்டியவரை சிறையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது.
ஜெனிவாவோ வேறு நாட்டின் தேவைக்காக நாங்கள் அரசியல் முடிவுகளை எடுக்க மாட்டோம்.
நாங்கள் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம் என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனை விரும்பாத நாடுகளும் இருக்கின்றன. விரும்பாதவர்களுக்கு நாங்கள் என்ன செய்தாலும் விருப்பமில்லை.
அவர்களுடன் நட்பாக முடியாது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





