10.75 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் குதிக்கும் இலங்கை வீரர்!

இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளின் ஏல விற்பனையில், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க, 10.75 கோடி இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

ரோயல் செலஞ்சர் பெங்களுர் அணிக்காக, வனிந்து ஹசரங்க இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளுக்கான ஏல விற்பனை தற்போது இடம்பெற்று வருகின்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அதிக பட்ச விலையான 12.25 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply