யாழில் கஞ்சாவுடன் நடமாடியவர் வசமாக சிக்கினார்!

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் ஒரு தொகுதிக் கஞ்சாவுடன் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply