தமிழ் மக்களை கொல்வதற்கு அரசுக்கு கொள்ளிக்கட்டை கொடுக்கும் டக்ளஸ் – சிவாஜிலிங்கம் சாடல்

தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டு சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊரைக் கொளுத்தும் ராஜாவுக்கு, கொள்ளிக்கட்டை கொடுக்கும் மந்திரி போல இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார். அவர் தான் டக்ளஸ் தேவானந்தா. அவர் வருவார், என்ன செய்ய வேண்டுமென்றே அவருக்கு தெரியாது. அவர் கதைப்பதும் விளங்காது.

இந்த நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். ஆகவே 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு படகு ஒழுங்குபடுத்தல் சட்டம் மற்றும் இழுவை மடி தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது. ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு உண்டு. அதை பயன்படுத்தி தீர்வைக் காண வேண்டும்.

எமக்கும் தமிழத்துக்குமான உறவை அறுத்து விட அதிக எண்ணிக்கையான ஆக்கள் உள்ளனர். அன்று சந்திரிகா அம்மையார் கடலுக்குள் மீனவர்களை இறங்குவதற்கு தடை விதித்தார். அப்போது நான் மருத்துவமனையில் இருந்து, மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றோம்.

டக்ளஸ் தேவானந்தா அண்மையில் யாழில்இடம்பெற்ற போராட்டத்தில் ஆவேசமாக செயற்பட்டார். அது கண்டிக்கத்தக்கது. இதனால் யாழ் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு முயற்சித்தனர். இதற்கு எதிராக நாம் தெளிவாக செயற்பட வேண்டும். திருமண வீட்டில் நான் மாப்பிளை, இறப்பு வீட்டில் நான் தான் பிணம் என்று திரிபவர் தான் டக்ளஸ் தேவானந்தா.- என்றார்.

பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Leave a Reply