உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவிப்பு

உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமையினால் பல நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கட்டளையிடுகின்றன.

இந்நிலையில் உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாவது, உக்ரைனில் 42 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள் ஆவர்.

மேலும் இலங்கையர்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடனே செயற்பட்டு வருவதுடன் இவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இருப்பினும், உக்ரைனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply