முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியமைக்கான காரணம், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நுகர்வோருக்கும் அரசாங்கத்திற்கும் எரிபொருள் விலையில் சீரான நிலை ஏற்படும் என்பதற்காகவே என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சமரவீரவினால் முன்மொழியப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை மீள அமுல்படுத்துவது தொடர்பில் தற்போதைய எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மங்கள தனது எரிபொருள் விலை சூத்திரத்தை முன்வைத்த போது மக்கள் அவரைப் பார்த்து சிரித்தனர்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டாலராக இருந்த 2020 ஏப்ரலில் இந்த விலை சூத்திரத்தைப் பயன்படுத்தியிருந்தால், நாட்டுக்கும் நுகர்வோருக்கும் பலன் கிடைத்திருக்கும்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, இலங்கையில் விலை அதிகம் குறையவில்லை. அரசாங்கம் ஒரு நிலையான விகிதத்தைக் கொண்டிருந்தது. இது மக்களுக்கோ அரசாங்கத்திற்கோ பயனளிக்கவில்லை.
எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது உலகளாவிய எரிபொருளின் விலை குறையும் போது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என்றும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது அரசாங்கத்திற்கும் நன்மை பயக்கும் என்றார்.





