யுவதியும் இளைஞனும் உறங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த இராணுவ கோப்ரல்கள்! நடந்தது என்ன? samugammedia

பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவ கோப்ரல்கள் அத்துருகிரிய பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளை திருடிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மது அருந்துவதற்காக விழா மண்டபத்துக்குச் சென்றபோது, அருகில் உள்ள அறையில் யுவதி ஒருவரும் இளைஞனும் உறங்கிக் கொண்டிருந்தபோதே சந்தேக நபர்களில் ஒருவர்  அறைக்குள் நுழைந்து கையடக்கத் தொலைபேசிகளைத் திருடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கோப்ரல் ஒருவரும், செவனகல மயூரகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கோப்ரல் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply