பிரான்சில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான ‘பாரிஸின் சிறந்த பாண்’ என்ற போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா என்ற இளைஞன் இன்றைய தினம் (28) இலங்கை வரவுள்ளார்.
பிரான்ஸில் வருடாந்தம் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை குறித்த இளைஞன் வென்றிருந்தார்.
30ஆவது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இந்தமுறை 126 பேரில் வெற்றியாளராக அவர் தெரிவு செய்யப்பட்டு 4 ஆயிரம் யூரோவை பணபரிசாக பெற்றிருந்தார்.
இதன்காரணமாக பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், இன்று நாட்டுக்கு வருகைத் தரும் அவர், அரச மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், பாணின் உற்பத்தி மற்றும் அதன் தனித்துவம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அது சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என தர்ஷன் செல்வராஜா குறிப்பிட்டுள்ளார்.






