மூன்று வருடங்களாக மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை..!samugammedia

தனது 11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் மூன்று வருடங்களாக தனது மகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றதாகவும், சந்தேகநபரின் இரண்டாவது மனைவி குழந்தையைக் கவனித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுக்கு தெரிந்தே துஷ்பிரயோகம் தொடர்வது தெரியவந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *