கல்முனை தொகுதி ஐ.தே.க.வின் ஒன்றுகூடல் நிகழ்வு! samugammedia

ஐக்கிய தேசிய கட்சியின்  கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு  ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் 10.00 மணியளவில் அல்-பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் கல்முனைத் தொகுதி முக்கியஸ்தருமான எஸ்.எல்.எஸ்.முஹீசின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர்களான அனோமா கமகே, மையோன் முஸ்தபா உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினரும் கட்சியின் கல்முனை தொகுதி முக்கியஸ்தருமான  ஏ.எச்.எச்.எம்.நபார் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள்,  முக்கியஸ்தர்கள் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *