யாழ் பல்கலையில் 'நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு'..!samugammedia

“சமூகக்  கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள்” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு  இன்று(7) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கைலாசபதி கலையரங்கில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கிருஸ்ணப்பிள்ளை விசாகரூபன் தலைமையில் ஆரம்பமான அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடானது கலை, கலாச்சார நிகழ்வுகள் , ஆய்வுரைகள் மற்றும் புலமையாளர் கௌரவிப்புக்களுடன் நாளைய தினம்  நிறைவடையவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *