பசறை கோணக்கலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பாம்பு தீண்டி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த பெண் தொழிலாளி கடந்த 16ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவில் உள்ள தோட்டப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியிருந்தார்.
இதன்பின்னர் அவருக்கு பசறை மாவட்ட வைத்தியசாலையில் முதலுதவிகள் அளிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.