துப்பாக்கியுடன் காணாமல்போன விமானப்படை வீரர்! திருகோணமலையில் சம்பவம் samugammedia

திருகோணமலை – மொரவெவ விமானப்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த விமானப்படை வீரரொருவர் T-56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

மொரவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரே நேற்று மாலை காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

காலி – வக்வெல்ல வீதியை சேர்ந்த 51415 எனும் விமானப்படை இலக்கமுடைய எம்.டி. கவீஷ (22வயது) என்பவரே தலைமறைவாகியுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த விமானப்படை வீரர் துப்பாக்கியுடன் காணாமல் போய் உள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் முறைப்பாடு தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *